காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வாதப்பிரதி வாதங்களை ஆரம்பித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதற்குரியவாறு நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.
எந்தவொரு தேர்தலை நடத்துவதாக இருந்தாலும் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தியா அல்ல என்று அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் கொழும்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்திருந்தபோது, 13 ஆவது திருத்தச் சட்டமே அரசியல் தீர்வு எனக்கூறியிருந்தார். யாழ்ப்பாணத்திலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தபோது அவ்வாறு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.