சென்ற திங்கட்கிழமை தாக்கல் செய்த மனுவில் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கவுள்ள இயற்கைத் திரவவாய்வு விநியோக ஒப்பந்தத்தைத் தடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் செயலாளர். நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் உட்பட 54 பேர் பொறுப்புக் கூறவேண்டுமெனவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நிவ்போர்ட் நிறுவனத்தின் பெயரும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கவுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இரகசியமாகச் செய்யப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மேற்கொண்ட விசாரணைகளில் அதிருப்தியடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித், சர்வதேச சமூகத்திடம் நீதி கோரவுள்ளதாகச் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், கெரவலப்பிட்டிய மின் நிலைய விவகாரம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.