தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 30 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இதுவரையும் குற்றவாளிகள் யார் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் பரிந்துரைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன் அந்தப் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராயர் கூறினார்.
அரசாங்கத்தின் இச் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறிய பேராயர், சர்வதேச நீதியைக் கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்க விசாரணைகளில் நம்பிக்கையிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.