வடமாகாணம் மன்னார்

நானாட்டான் பிரதேச சபையின் புதிய உறுப்பினர் நியமனம்

வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளிவரும்
பதிப்பு: 2021 ஒக். 24 21:06
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 24 21:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினராக முருங்கன் கற்கிடந்த குளத்தைச் சேர்ந்த பெனடிற் யாக்கோப்பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நானாட்டான் பிரதேச சபைக்கு ஏலவே தெரிவாகிய உறுப்பினர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில் அவரின் வெற்றிடத்திற்கே மேற்படி உறுப்பினர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நானாட்டான் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதேச சபை உறுப்பினராக நானாட்டான் ரசூல் புதுவெளியைச் சேர்ந்த நாகூர் மீரா ராசிக் பரீத் தெரிவானார்.
 
பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு பகுதியில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக குறித்த பிரதேச சபை உறுப்பினர் ராசிக் பரீத் மரணமடைந்தார். இந்த நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினரின் மறைவையடுத்து, நானாட்டான் பிரதேச சபையில் நீண்ட கால வெற்றிடமாகக் காணப்பட்ட இடத்திற்கே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜெயசேகர குறித்த பெனடிற் யாக்கோப்பிள்ளையை நானாட்டான் பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக நியமனம் செய்துள்ளார்.

பெனடிற் யாக்கோப்பிள்ளை, நானாட்டான் பிரதேச சபையின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலையடுத்து பெனடிற் யாக்கோப்பிள்ளை நானாட்டான் பிரதேச சபை உறுப்பினராக கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை சட்டத்தரணி எம்.ரூபன்ராஜ் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு புதிய பெண் உறுப்பினர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி நியமனம் செய்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு அடம்பன் வட்டாரத்தில் தெரிவாகி அச்சபையின் தவிசாளராகப் பணியாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஆசிர்வாதம் சந்தியோகு அண்மையில் மரணமடைந்தார்.

இந்தநிலையில் மரணமடைந்த முன்னாள் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகுவின் வெற்றிடத்திற்கு, மன்னார் அடம்பன் சாளம்பனைச் சேர்ந்த திருமதி மேரி கொன்சி மோகனராசா ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டாரவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பான ஆவணங்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேச சபை உறுப்பினர், நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.