கொவிட் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சு இன்று இரவு வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகளிலேயே மாகாணப் போக்குவரத்துக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திருமண மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளளவில் 100 பேருக்கு மேற்படாமல் திருமண வைபவங்களில் கலந்து கொள்ளமுடியும். மேலும், திறந்த வெளி திருமண நிழ்வுகளில் 150 பேர் கலந்து கொள்ள முடியும் ஆனால் மதுபானங்களைப் பகிர அனுமதி இல்லை.
மாவட்டங்களில் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.