ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச சந்தித்தபோது விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார. பேராசிரியர் திஸ்ஸவிதார ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையில் மீண்டும் நேற்று சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சந்திப்பு நடைபெற்றது. கம்பாக கெரவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மின்சக்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் இடம்பெற்றதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
விமல் வீரவன்ச சந்திப்பில் கலந்துகொள்வதாகவும் உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக நீண்டநேரம் பேசினாரெனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் பலரின் கையடக்கத் தொலைபேசிகளும் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்ள முடியாதவாறு நேற்று முழுவதும் செயலிழந்து காணப்பட்டன.