கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், நேற்று நான்காம் திகதி கொழும்பில் பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி ஏழு சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்றுவரை 16 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தீபால் பெரேரா தெரிவித்தார். சிறுவர்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதற்குரிய சிகிச்சை வசதிகள் போதியதாக இல்லை என்றும் கூறிய அவர் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு நேற்று வியாழக் கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.