ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை. அந்த அறிக்கை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதால், அரசாங்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி செய்தியாளர் மாநாடு ஒன்றில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
அதனால் அருட்தந்தையைக் கைது செய்ய வேண்டுமென அமைச்சர்கள் சிலரும் பௌத்த தேரர்கள் சிலரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அருட்தந்தையைக் கைது செய்யும் நோக்கம் இல்லையெனவும் ஆனாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்துக்குத் தொடர்புள்ளது என்ற தொனியில் கருத்து வெளியிடப்பட்டதாலேயே குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை நடத்தியதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே அருட் தந்தை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஆனால் பொலிஸாரின் விசாரணை முடிவடையாமல் அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்யும் செய்யும் நோக்கம் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.