அதற்குப் பதில் அளித்த அவர் இது தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உப குழு ஒன்றைக் கூட்டுவோமெனப் பரிந்துரைத்தார். இதனையடுத்து உப குழுக் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
அம்பாந்தோட்டை, குருநாகல், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றன. இதுவரை ஒன்பது பேர் பலியானதுடன் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.
இன்று புதன்கிழமையும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இதுவரை இருபத்து இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரித்த பின்னரே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.