வடமாகாணம்

முல்லைத்தீவுக் கடலில் மூன்று இளைஞர்கள் பலி

குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் மூழ்கினர்
பதிப்பு: 2021 டிச. 05 11:07
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: டிச. 06 02:23
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வாகனம் ஒன்றில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்குச் சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
 
தேடுதலின் போது ஒருவருடைய உடலம் மீட்க்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

குறித்த இளைஞர்களில் மதவுவைத்த குளத்தை சேர்ந்த 27 வயதான மனோகரன் தனுஷன் 27 வயதான சிவலிங்கம் சமிலன், தோணிக்கல் பகுதியை சேர்ந்த 26 வயதான விஜயகுமாரன் தர்சன் ஆகியோரே கடலில் மாயமாகியுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து கூடச் சென்ற யுவதியிடம் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.