வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு முன்னதாக

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி

மகிந்த ராஜபக்சவுடன் பௌத்த குருமார் சிலரும் நடவடிக்கை
பதிப்பு: 2021 டிச. 06 10:08
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 07 20:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் முயற்சி எடுத்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. விமல் வீரவன்ச, தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஆறு பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, உள்ளிட்ட சில உறுப்பினர்களுடன் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
 
இதன் பின்னணியிலேயே மகிந்த ராஜபக்ச பங்காளிக்கட்சிகளுடன் தொடர்ந்து பேச முற்படுவதாகவும் பௌத்த குருமாரின் ஒத்துழைப்புகளைப் பெற்றுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்நர் பசில் ரஜபச்பக்ச ஆகியோருடன் பேச முடியாதென பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தொடர்ந்து ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முரண்பட்டுள்ள பங்காளிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.