இதன் பின்னணியிலேயே மகிந்த ராஜபக்ச பங்காளிக்கட்சிகளுடன் தொடர்ந்து பேச முற்படுவதாகவும் பௌத்த குருமாரின் ஒத்துழைப்புகளைப் பெற்றுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்நர் பசில் ரஜபச்பக்ச ஆகியோருடன் பேச முடியாதென பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தொடர்ந்து ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முரண்பட்டுள்ள பங்காளிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.