ஆகவே அந்தத் திடீர் பயணத்துக்கான காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பொருளாதார மீட்சிக்கான அனைத்து நிதி விபரங்கள் மற்றும் திட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் முன்வைக்கும் போது அதனைச் செவிமடுக்க வேண்டிய பொறுப்பு நிதியமைச்சருக்கே உண்டு. ஆனால் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார்.
வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் டொலர் கையிருப்புகள் தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், இதுவரை அந்த ஆவணங்கள் எதுவுமே சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தினார்.
வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் டொலர் கையிருப்புகள் தொடர்பாக கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்குக்கும் வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்த வெளிநாட்டு நிதிகள் பற்றிய புள்ளி விபரங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூர்மைச் செய்தித் தளத்தில் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.