இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவுடன் பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்படுமென பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவது குறித்து ஆலோசிப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ச கூறினார்.