அத்துடன் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக புதிய வருடப் பிறப்பின் முதல் நாளான சனிக்கிழமை குறித்த வயோதிபர் மரணமடைந்ததாக மேற்படி வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 3183 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த 2020ஆம் ஆண்டு 17 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் 2021ஆம் ஆண்டு 3166 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் நோய் தொற்றினால் 35 பேர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்கள் வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.