ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமன அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பாரெனவும் அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்துக்குள் மேலும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயாரெனவும் ஆனாலும் அரசாங்கம் தங்களை விலக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் அரசாங்கத்தைக் கைப்பற்றும் என்று அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்த சஜித் பிரேமதாச அங்கு செய்தியாளர்கள் முன்னிலையில் இவ்வாறு கூறினார்.
கிளிநொச்சி. முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் சஜித் பிரேமதாச பயணம் செய்துள்ளார். வடமாகாணத்துக்கான சுற்றுப் பணயத்தின்போது ஆட்சிக் கவிழ்ப்புப் பற்றியே சஜித் பிரேமதாச அதிகமாகப் பேசியுள்ளார்.
இதேவேளை, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன