பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பொலிஸாருடனும் மக்கள் தர்க்கப்படுகின்றனர். வரிசையில் காத்திருக்கும் மக்களிடையேயும் குழு மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் இராணுவத்தினரும் வர்த்தக மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை, மொனராகல ஆகிய மாவட்டங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த மக்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பலர் காயமடைந்துள்ளனர். நிட்டம்புவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த மக்கள் பலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மக்கள் குழப்பமடைந்துள்ளதால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதிகளில் செல்ல அச்சமடைகின்றனர்.
இதேவேளை, பத்து மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.