கோட்டா கோ கம

போராட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் தொடருகின்றது

கொழும்பை நோக்கி அம்பாந்தோட்டையில் இருந்து இன்று ஆரம்பித்த மக்கள் பேரணி
பதிப்பு: 2022 ஏப். 17 22:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 20 01:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று அம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளது. காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டம், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் நடைபெறுவதால். இந்தப் பேரணி கொழும்பு நகருடன் முடிவடைந்துவிடுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
 
காலிமுகத் திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தப் பேரணி நடைபெற்றாலும் காலிமுகத்திடலுக்குச செல்லாது கொழும்பு நகரில் ஒன்றுகூடி அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பி கூறியுள்ளது.

காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் இன்று அமைக்கப்பட்ட கொட்டகைகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டபோதும், அங்கு கூடிய இளைஞர்கள் மீண்டும் கொட்டகைகளை அமைத்து கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிடம் தற்போது கையொப்பம் பெறப்பட்டு வருவதாகவும் நாளை திங்கட்கிழமை கையொப்பம் பெறப்பட்டு முடிவடைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பது குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்து வருகின்றது.