காலிமுகத் திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தப் பேரணி நடைபெற்றாலும் காலிமுகத்திடலுக்குச செல்லாது கொழும்பு நகரில் ஒன்றுகூடி அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பி கூறியுள்ளது.
காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் இன்று அமைக்கப்பட்ட கொட்டகைகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டபோதும், அங்கு கூடிய இளைஞர்கள் மீண்டும் கொட்டகைகளை அமைத்து கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதேவேளை, ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிடம் தற்போது கையொப்பம் பெறப்பட்டு வருவதாகவும் நாளை திங்கட்கிழமை கையொப்பம் பெறப்பட்டு முடிவடைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பது குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்து வருகின்றது.