மாணவர்கள் பொலிஸார் மீது கற்களை வீசினர். ராஜபக்ச அரசாங்கம் பதவி விலக வேண்டுமென உரக்கச் சத்தமிட்ட மாணவர்கள் கோட்டாபய மகிந்த. பசில் ஆகியோருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தினால் கொழும்பின் முக்கிய நகரங்களான பத்தரமுள்ள, ராஜகிரிய, பொரள்ள, மருதானை உள்ளிட்ட பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை இலங்கைத்தீவு முழுவதிலும் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துடன் அரசாங்கம் பதவி விலகவில்லையானால். ஏதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடம்பெறுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.