இது தொடர்பாக நாளை சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் ஒன்றில் மனித உரிமைச் சட்டத்தரணிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை. இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டின்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் இறுதியில் பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டதாகவும் லங்காதீப என்ற சிங்களச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரதமரின் செயலாளர் உடனடியாகவே சமூகவலைத்தளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
அதேவேளை. 148 வாக்குகளினால் மீண்டும் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதேவேளை. இன்று இரண்டாம் நாளாக நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸாருடன் கடும் மோதல் ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர்.
மாணவர்கள் பலர் தங்கள் உள்ளாடைகளைக் கழற்றி பொலிஸார் அமைத்த கம்பி வேலிகளில் தொங்கவிட்டனர். நாடாளுமன்றத்தில் உள்ள கள்வர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கோரியே சுமார் எட்டு மணி நேரமாகப் போராட்டம் இடம்பெற்றது.
கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் இன்று போராட்டம் இடம்பெற்றது. பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல் இழந்தன. போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.
அரசாங்கம் பதவி விலகவில்லையானால் எதிர்வரும் பதினொராம் திகதி புதன்கிழமை முதல் தொடர் பகிஸ்கரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தொழிற் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.