இதேவேளை, தீவின் தெற்கில் உள்ள அம்பாந்தோட்டைக்கு அண்மித்த இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமாரவின் இல்லத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரத் குமார திங்கள் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
திங்கள் இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற கலகத்தின்போது கண்ணீர்ப் புகைக்குண்டு வெடித்ததில் 24 வயதுடைய பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் மாரடைப்பினால் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள் குவிக்கக்பட்டுள்ளனர்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச பதவி வலிகும் வரை தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டுமென ஆசியர் சங்கங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.