காலிமுகத் திடலில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது கூச்சல் குழப்பம் விளைவித்ததுடன், ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டும் என்றும் கோசம் எழுப்பினர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமராகப் பதவிப பிரமாணம் செய்த ரணில் விக்கிரமங்ச கொழும்பில் உள்ள பௌத்த, சைவ ஆலயங்களுக்கும் மற்றும் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபட்டார்.
நாளை வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவிகளைப் பெற்றிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட மலையகத் தமிழ், முஸ்லிம்கள் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்குமெனக் கூறப்படுகின்றது.