இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமையை அரசாங்கம் மறுத்து வந்ததென்றும், ஆனாலும் இம்முறை கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு போ என்று கூறும் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் ஒன்றுகூடி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதாகவும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
காலிமுகத் திடல் மைதானத்தில் நினைவுத்தூபி ஒன்று செய்யப்பட்டு அதற்கு மாலை அணிவித்துத் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அங்குகூடியிருந்த அனைவரும் அதற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
வடக்குக் கிழக்கில் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இடம்பெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கூட்டாக வலியுறுத்தும் வகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.