நகல் வரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிர்ப்பு வெளியிடவில்லை என அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
இரட்டைப் பிராஜாவுரிமை பெற்றிருந்த பசில் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.