தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்திய சரத் வீரசேகர, 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்க முடியாதென்றார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதனால். மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களும் குறைவடைந்துவிடும் என்றும், இதனால் மாகாணங்கள் தனித்து இயங்கக் கூடிய சமஸ்டி ஆட்சி முறையை உருவாக்கும் ஆபத்து நேரிடலாமெனவும் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் கூறினார்.
இதன் காரணமாகவே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதென்று சரத் வீரசேகர தெரிவித்தார்.
போர்க்காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியாகப் பதவி வகித்திருந்த சரத் வீரசேகர, 2020 நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராகப் பதவி வகித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.