நாளை ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் நேற்றுப் புதன்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் அறிவித்தனர்.
இன்று மாலையும் பொலிஸார் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். வெளியேற மறுத்துள்ள போராட்டக்காரர்களுக்கு நாளை மாலை ஐந்து மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் காலிமுகத்திடல் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.