இலங்கைத்தீவில் பொருளாதார நெருக்கடி தொடரும் சூழலிலும்

தேசிய அரசாங்கம் அமைப்பதில் தொடரும் இழுபறி - ரணில் சஜித் சந்திப்பில் இணக்கமில்லை

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் வெளியில் இருந்து ஆதரவு என்கிறார் சஜித்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 22 21:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 22 21:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல். சர்வகட்சியாக அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாச ஆகியோர் திங்கட்கிழமை முற்பகல் சந்தித்து உரையாடியிருந்தனர். இதன்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சந்திப்பில் பங்குபற்றியிருந்தார்.
 
சர்வகட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் விரிவாகக் கலந்துரையாடியதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணையுமாறு ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசாவிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் அதனை நிராகரித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சி அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் சர்வகட்சி அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

மக்கள் விரோத செயற்பாடுகள், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவற்றுக்கு சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அல்லது சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாகச் சந்திப்பில் இணக்கம் ஏற்படவில்லை.