சர்வகட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் விரிவாகக் கலந்துரையாடியதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணையுமாறு ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசாவிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனாலும் அதனை நிராகரித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சி அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் சர்வகட்சி அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
மக்கள் விரோத செயற்பாடுகள், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவற்றுக்கு சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் அல்லது சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாகச் சந்திப்பில் இணக்கம் ஏற்படவில்லை.