அந்நியச் செலவாணி குறைவடந்து செல்லும் நிலையில், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு டொலர்களைப் பயன்படுத்த முடியுமென நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சர்வதேச நாயண நிதியம் விதித்த பரிந்துரைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. குறிப்பாக அரசு ஊழியர்கள் சுமார் ஆறு இலட்சம்பேரை பணியில் இருந்து இடை நிறுத்தல், மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் உள்ளிட்ட பன்னிரெண்டு அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல் போன்ற நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ளன.
இதன் காரணத்தினாலேயே தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணயத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தொிவித்துள்ளார். விதிக்கப்பட்ட பல நிபந்தனைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும். ஆனாலும் சில நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாதெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.