இந்த ஒரு நிலையில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுத்து, இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்காமல் சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமானால், சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
இராஜாங்க அமைச்சர்களை நியமிக்காமல் குறுகிய கால நோக்கில் சிறந்த கொள்கையின் அடிப்படையில் சிறியளவு அமைச்சரவையோடு சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவை வழங்குவோம் எனவும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது. அந்தக் கட்சி அரசாங்கம் மீது விமர்சனங்கள் உண்டு. அதனாலேயே ஏனைய கட்சிகளின் உறுப்பினா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டும்.
பொதுஜன பெரமுன அதிகளவில் அமைச்சுப் பொறுப்புக்களைக் கோரியுள்ளதால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி எற்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச அணியும் ஜே.வி.பி போன்ற சிறிய எதிா்க்கட்சிகளும் அமைச்சரவையை அமைப்பதற்குரிய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நியாயமான கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர்த்து எதிர்க் கட்சிகளின் நிலைப்பாடு ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் பேராசிரியர் நாலக கொடஹேவா சுட்டிகட்டினார்.