மருதானை தொழில் நுட்பக்கல்லூரி முன்பாக ஆரம்பித்த பேரணி, கோட்டை ஊடாகச் செல்ல முற்பட்டபோது கலகமடக்கும் பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து கோட்டைக்குச் செல்லும பிரதான வீதியை வழிமறித்தனர்.
இதனால் அமைதியாகத் திரும்பிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானை சுற்று வட்டம் ஊடாக பொரளைச் சுற்றுவட்டத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஆனால் மருதானை டீன்ஸ் விதியில் கம்பி வேலிகளை அமைத்துத் தடை செய்ய பொலிஸார், கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர்.
அதனையும் மீறிச் செல்ல முற்பட்டபோது நீர்த்தாரைப் பிரயோகம் செய்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். அச்சுறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பொலிஸாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.