கொழும்பின் புறகர் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தெரிவின்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் வாக்களித்ததால், அதற்கு நன்றிக் கடனாகவே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளையும் பொருட்படுத்தாமல் அதிகளவு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
போராட்டங்களின் மூலம் துரத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளார். இலங்கையைப் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கவைத்த பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றனர். இதுதான் ரணில் விக்கிரமசிங்கவின் ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றும் ஆட்சி என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கையில் மக்கள் அபிப்பிராயம் ஒன்று புதிதாக உருவாக வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களின் அபிப்பிராயத்துக்கு அடிபணிந்துள்ளதாகக் கூறினார்.