தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய ஒரு சட்டத்தை அமுல்படுத்தும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உரிய முறையில் செயற்படுத்தப்படுமெனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கையில் புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் ஊடாகப் புலம்பெயர் மக்களோடு தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
அமர்வு ஆரம்பித்த முதல் நாளில் மியன்மார் நிலவரங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர் இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.