பேராயர் இல்லத்தைச் சேர்ந்த அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராகப் பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ள நிலையிலேயே எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது, அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லையென பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் ஜெனிவா மனித உரிமைச் சபையிலும் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.