குறிப்பாக அரச செலவுகளைக் குறைக்க வேண்டுமென்பது முக்கிய நிபந்தனையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ராஜபக்சக்களின் கட்சியின் அழுத்தங்களை ரணில் விக்கிரமசிங்க எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் திங்கட்கிழமை இரவு தனியார் இலத்திரனவியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஹர்சா டி சில்வா இவ்வாறு கூறினார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டாமென ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் பிரேமதாச எடுத்துக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜே.வி.பியும் கண்டனம் வெளியிட்டுள்ளது.