கடந்த ஐந்து ஐந்து ஆண்டுகளில், தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழு மில்லியன் டொலர்கள் கடனை சீனா இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இக் கடனில் எண்ணூற்று ஒன்பது மில்லியன் டொலர்கள் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து சந்தைக் கடனாகப் பெறப்பட்டுள்ளதாக டெய்லி பைனான்சியல் டைம்ஸ் ஆங்கில இதழ் கூறுகின்றது.
2021 ஆம் ஆண்டில் அறுநூற்றுப் பத்து மில்லியன் டொலர்கள் நிதியை சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சுமார் நாற்பத்து நான்காயிரம் மெற்றிக் தொன் உரத்தை உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் நோக்கில் இலங்கை விவசாயிகளுக்கு இந்தியா வழங்கியிருந்தது.