சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் சுமார் இரண்டு மணி நேரமாக விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆனால் இருவரும் பேசிய விடயங்கள் எதுவுமே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
பீரிஸ் தலைமையிலான சுதந்திர தேசிய சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.
பீரிஸ் தலைமையிலான சுதந்திர தேசிய சபையில் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து மேலும் பல உறுப்பினர்கள் சுதந்திர தேசிய சபையில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.