ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தனிக் கட்சி அமைத்துள்ள

பேராசிரியர் பீரிஸ் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடியுள்ளனர்
பதிப்பு: 2022 ஒக். 03 21:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 04 22:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மக்களின் தொடர் போராட்டத்தினால் கடந்த யூலை மாதம் 12 ஆம் திகதி பதவி விலகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து சுதந்திர தேசிய சபையாகச் செயற்படும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு மல்சேகர மாவத்தையில் உள்ள இலங்கைப் பாதுகாப்புக் கற்கை நெறிகளுக்கான அக்கடமி வளாகத்திற்கு அருகில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் சுமார் இரண்டு மணி நேரமாக விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் இருவரும் பேசிய விடயங்கள் எதுவுமே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

பீரிஸ் தலைமையிலான சுதந்திர தேசிய சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

பீரிஸ் தலைமையிலான சுதந்திர தேசிய சபையில் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து மேலும் பல உறுப்பினர்கள் சுதந்திர தேசிய சபையில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.