இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் கொழும்பில் உள்ள முதலீட்டாளர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாள் பயணமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள ரொபர்ட் கப்ரோத். கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரையும் இன்று மாலை சந்தித்ததாகக் கூறப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் திட்டங்களுக்கு மேலதிகமாக அமெரிக்க நிதியுதவி இலங்கைக்கு நேரடியாகக் கிடைக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ கடந்த வாரம் கொழும்பில் கூறியிருந்தாா்.
அதிகாரபூர்வமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புதன்கிழமை மாலை சந்தித்தபோது இவ்வாறு கூறியிருந்தார்.
சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிடுமெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா இலங்கை மீது அதிக கரிசனை கொண்டுள்ளமை இராஜாங்கச் செயலாளர்களின் கொழும்பு வருகை மூலம் தெரியவருகின்றது.