ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இது தொடர்பான பேச்சுக்களை நடத்தி வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் பலருடன் ரவி கருணாநாயக்கா உரையாடி வருவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அன்னம் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும்
இந்த நிலையிலேயே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரவி கருணாநாயக்காவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.