2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படுவதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீதும் பேராயர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் அல்லது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டக்கார்களுக்கு எதிராக தற்போதுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படுவது கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறான மற்றும் நியாயமற்ற முறையில் பயன்படுத்துவதற்கும் அறிக்கையில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக - சமயத் தலைவர்கள் மற்றும் அத்தகைய கொள்கைகளுக்கு ஆதரவான முறையில் அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மூன்றுபேர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் நீதிக்கு மாறான முறையில் எழுபத்து ஐந்து நாட்களுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.