புதிய ஒழுங்கு முறைகளினால்

பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் மீட்சி பெறுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது

வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் விளக்கம் வெளியானது
பதிப்பு: 2022 நவ. 10 22:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 00:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைத்தீவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து குறிப்பிடத்தக்களவு உயர்வடையுமென எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார ஒழுங்குகள் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. ஆனாலும் அந்த நெருக்கடிகள் தற்போது குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கொவிட் 19 நோய்த்தாக்கம் 2021 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கமே 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரிய நெருக்கடியை தோற்றுவித்தது என்றும் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்கள் மூலமாக சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் செய்துகொண்டதையடுத்துக் கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை மேம்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டமானது, இலங்கைத்தீவுக்கு மிகவும் தேவையான மற்றும் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.