வடக்குக், கிழக்கு மாகாணத்துக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பிராந்தியத்தில் வல்லரசாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
வடக்குக், கிழக்கு மாகாணத்துக்குக் கூடுதல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்து அந்த இரண்டு மாகாணங்களும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கும்.
ஆகவே அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. அதற்குப் பதிலாக அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் மாத்திரமே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு என்று கூறிய சரத் வீரசேகர, இந்திய அரசுடன் இலங்கை நட்புறவைத் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் வற்புறுத்தினார்.