மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அறிவிக்கவில்லை. எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக ஜே.வி.பி ஏற்கனவே கூறியிருந்தது.
வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் சென்ற பதினைந்தாம் திகதி முதல் நாளை 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வரை இடம்பெற்று வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழு நிலை விவாதம் நாளை மறுதினம் இருபத்து மூன்றாம் திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் எட்டாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் எட்டாம் திகதி மாலை நடத்தப்படவுள்ளது.