கடந்த ஜூலை பத்தாம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கல்வி அமைச்சின் வால் கதவுகளைச் சேதப்படுத்தியமை தொடர்பாகவே இரு மாணவர்கள் மீதும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
இருவரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், நாளை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும்சட்டத்தரணி தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை கடுவெல நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.