தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகத் தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்களைக் காரணம் கூறித் தேர்தலைப் பிற்போட அரசாங்கம் முற்படுவதாகவும், அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்த உயர் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கை மையம், தேசிய சமாதானப் பேரவை போன்ற பொது அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படமாட்டாது என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.