ஆகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களுடன் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியாது என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண கொழும்பில் இன்று புதன்கிழமை கருத்து வெளியிட்டார்.
அதிகாரத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக்கொண்டு இலங்கையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ரணில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தினார்.
எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக தெரிவித்த ரணில் தற்போது அது பற்றி எதுவுமே பேசவில்லை என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, சர்வகட்சிக் கூட்டத்தில் ஜே.வி.பி கலந்துகொள்ளாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளமாட்டார் என்றும் கட்சியின் ஏனைய சில உறுப்பினர்கள் மாத்திரமே பங்குகொள்வர் என்றும் கூறப்படுகின்றது.