ஆனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி இலங்கைக்கு கிடைக்குமென நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொழும்பில் இன்று முற்பகல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று வியாழக்கிழமை முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியம் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.