அதேவேளை, மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உடனடி பாதுகாப்பை வழங்கியதற்காக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி பொலிஸ் மா அதிபருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் பன்னிரென்டு நாட்கள் சென்று விட்ட நிலையில். சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணங்களை பொலிஸ் மா அதிபர் வெளியிட வேண்டுமென பெப்ரல் அமைப்புக் கோரியுள்ளது.
உயிர் அச்சறுத்தல் வெளிநாடு ஒன்றில் இருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கைப் பொலிஸாரின் சர்வதேச வலைப்பின்னல்கள் மூலமாக பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமெனவும் பெப்ரல அமைப்பு கடிதத்தில் கூட்டிக்காட்டியுள்ளது.