உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்த முடியுமென உயர்நீதிமன்றம கூறியுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் கூறினார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுமென எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சில ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களைக் குழப்புகின்றன.
ஆனால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமென இதுவரையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார். அதேவேளை நிதிப் பற்றாக்குறை உள்ளமையினால் தேர்தலுக்கான செலவுகள் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், போதிய நிதி இல்லாமையினால் தேர்தல் தொடர்பான பணிகளில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.