அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி நிவாரணம் போன்றவற்றுக்கு அரசாங்கம் 196 பில்லியனை செலவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எடுத்துக் கூறியதாகவும் அமைச்சர் பெந்துல குணவர்த்தன கூறினார்.
அரசாங்கத்தின் அன்றாட அத்தியாவசிய செலவுக்காக 23 பில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில் மேலதிகமாக மார்ச் மாதத்தில் உள்ளூர், வெளிநாட்டு கடன் சேவைகளுக்காக 508 பில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடனேயே மார்ச் மாதத்தில் நிதியில்லையென அரசாங்கம் பொய்யான தகவலைக் கூறுவதாக எதிர்க்கட்சிகள குற்றம் சுமத்தியுள்ளன.
தேர்தலை நடத்த நிதியில்லை என்று நிதியமைச்சின் செயலாளா் தங்களுக்கு அறிவித்ததாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிஹால் புஞ்சிஹேவா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
நிதிப் பற்றாக்குறையினால் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்குக் கடந்த வாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.