அதேவேளை, ஜனாதிபதி செயலகம் எழுத்துமூலம் தெரிவித்ததையடுத்து தாங்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கத்தின் பங்குதாரர்கள், தமது எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கும், அவர்களின் செயற்திட்டத்துக்கான காலவரையறையை நிர்ணயம் செய்வதற்கும் நாளை சனிக்கிழமை கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அரச வைத்தியர் சங்கம் கூறியுள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது.
சுகாதாரம், மின்சாரம், எரிசக்தி, கல்வி, துறைமுகங்கள், தபால் சேவைகள் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டமையால் பொதுமக்கள் இன்னல்களை எதிர் நோக்கியிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதால் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ரயில் பற்றாக்குறையால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.