சென்ற கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த ஹர்சா டி சில்வா, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி அங்கீகாரம் பெற வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அத்துடன் அரசாங்கத்துடன் இணையும் நோக்கம் இல்லை என்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் கூறியிருந்தர்.
ஆனாலும் மற்றொரு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், பொருளாதார நெருக்கடிச் சூழல் கட்சி அரசியலைப்பாராது, தேசத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹர்ச டி சில்வா கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. குறித்த மூன்று பேருக்கும் அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.